Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் கனமழையால் இன்று மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...

    தமிழகத்தில் கனமழையால் இன்று மூன்று மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

    தமிழகத்தில் கனமழை காரணமாக தேனீ ,தூத்துக்குடி ,விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

    அதுமட்டுமின்றி இன்று தொடங்கி, டிசம்பர் 2 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தென்மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை பெய்து வருகிறது .

    அதிலும் குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விருதுநகர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதேபோல் தேனீ மாவட்டத்தில் அல்லிநகரம், ரத்தினம் நகர், பழனிசெட்டிப்பட்டி,உள்ளிட்ட இடங்களிலும், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களிலும் கனமழை பெய்துவருவதால் மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துளளது .

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....