புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் உத்தரபிரதேச யோத்தா மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றிப் பெற்றன.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் உத்தரபிரதேச யோத்தா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் , தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.
இதில் உத்தரபிரதேச யோத்தா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணி மோதிய ஆட்டத்தில், 33-32 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச அணி வெற்றிபெற்றது. அதேபோல, மற்றொரு ஆட்டத்தில் 48-28 புள்ளி கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
மேலும், இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஹரியான ஸ்டீலர்ஸ் மற்றும் யு-மும்பா அணிகளும், புனேரி பல்தான் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதவுள்ளன.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள்; உச்சநீதிமன்றத்தில் விசாரணை