Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபுரோ கபடி போட்டி: படுதோல்வியடைந்த தெலுங்கு டைட்டன்ஸ்..

    புரோ கபடி போட்டி: படுதோல்வியடைந்த தெலுங்கு டைட்டன்ஸ்..

    புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் உத்தரபிரதேச யோத்தா மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றிப் பெற்றன. 

    புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் உத்தரபிரதேச யோத்தா  மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் , தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. 

    இதில் உத்தரபிரதேச யோத்தா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணி மோதிய ஆட்டத்தில், 33-32 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச அணி வெற்றிபெற்றது. அதேபோல, மற்றொரு ஆட்டத்தில் 48-28 புள்ளி கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 

    மேலும், இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஹரியான ஸ்டீலர்ஸ் மற்றும் யு-மும்பா அணிகளும், புனேரி பல்தான் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதவுள்ளன.

    ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள்; உச்சநீதிமன்றத்தில் விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....