விஜயகாந்த் ‘பொது நிகழ்வுகளில் பார்க்கமுடியவில்லையே அவரது குரலை கேட்க முடியவில்லையே’ என்று அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜயகாந்த் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் இருந்தார். ஓய்வு நேரங்களில் பொது நிகழ்வில் கலந்துகொள்வதோ, பேசுவதோ இல்லை கட்சி அலுவலகத்துக்கு மட்டும் எப்போதாவது அழைத்துவரப்படுவார்.
தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக வந்த தேமுதிக பெரிதளவில் வெற்றி இல்லை என்றாலும், 35 இடங்களில் வெற்றி பெற்றனர்.
கட்சி நிகழ்ச்சிகளில் பேசாவிட்டாலும் கண்ணாடி அணிந்து பழைய விஜயகாந்தாய் அமர்ந்திருந்ததே தொண்டர்களுக்கு தெம்பூட்டும் வகையில் இருந்தது. ஆனால், தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருப்பது வேதனையளிப்பதாக தேமுதிக தொண்டர்கள் கூறிகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மற்றும் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.