வேலூரில் அண்ணனே தனது உடன் பிறந்த தங்கையை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து இவரது அண்ணன் அந்தச் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது தங்கை என்று கூட பார்க்காமல், அந்தச் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அந்தச் சிறுமியை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அந்தச் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இத்தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, பிறகு அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அச்சிறுமியின் உடன் பிறந்த அண்ணனே பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அச்சிறுமியின் தாயார் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகளின் கண் முன்னே தந்தையை அடித்த போக்குவரத்து ஊழியர்கள்.. தீயாய் பரவும் தாக்குதல் சம்பவம்