Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா ? : ரசிகர்களின் செயலா ?

    ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா ? : ரசிகர்களின் செயலா ?

    சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்களைக் கடுமையாக விமர்சித்த விவகாரத்தில் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டார் என்ற தகவல் கடுமையாக காட்டுத்தீ போல பரவி வருகிறது. 

    சமீபத்தில் இயக்குநர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. பல நாட்கள் காத்திருப்புக்குப் பின் வெளியான இப்படத்தைக் கடுமையாக விமர்சித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன். மேலும், அவர் அஜித்தின் முகம் பஜன்லால் சேட் போல இருப்பதாகவும் அவரது நடனம் பரோட்டாவுக்கு மாவு பிசைவது போலவும் இருக்கிறது என கூறியது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை வரவழைத்தது. இதற்கு, பல சினிமா பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தையும் கடுமையாக விமர்சித்த இவர், முருகன் வேடம் என்றாலே சிவகுமார் தான் என்றும், இதனைச் செய்வதற்கு முன் சூரியா யோசித்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார். இதனால் சூர்யா ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறன் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ட்விட்டரில் அவருக்கு கடுமையான மிரட்டல்களையும் விடுத்திருந்தனர். 

    ரசிகர்கள் மட்டுமில்லாது சினிமா பிரபலங்களும் இவருக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தனர். கள்ளன் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய பிக் பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுனன் சினிமாவில் இருந்துகொண்டே சினிமாவை இப்படி விமர்சிப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்தார். மேலும், சுற்றி வளைத்து பேசவில்லை ப்ளூ சட்டை மாறனைத் தான் கூறுகிறேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார். 

    அஜித்குமாரின் தீவிர ரசிகரான நடிகர் ஆர்.கே.சுரேஷ், ப்ளூ சட்டை மாறனை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து இருந்தார். ப்ளூ சட்டை மாறனும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளிலே அவரை பதிலுக்கு விமர்சித்து இருந்தார். 

    இப்படியாக பிரச்சினைகள் போய்க்கொண்டிக்கும் நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் ப்ளூ சட்டை மாறனுக்கு என்ன ஆச்சு என்று ப்ளூ சட்டை மாறன் பிவிஆர் திரையரங்கின் உள்ளே நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதனால், வலிமை படத்தை விமர்சித்ததுக்குத்தான் அஜித் ரசிகர்கள் அவரைத் திரையரங்கில் வைத்து தாக்கி உள்ளனர் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனை மறுத்துள்ள ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பாணியிலேயே ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....