Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்சிவகார்த்திகேயன் பட இயக்குனருக்கு நேர்ந்த அவதூறு, களத்தில் குதித்த ரசிகர்களால் காரசாரம்!

    சிவகார்த்திகேயன் பட இயக்குனருக்கு நேர்ந்த அவதூறு, களத்தில் குதித்த ரசிகர்களால் காரசாரம்!

    விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து பெரும்பாலான ரசிகர்களால் கவரப்பட்ட திரைப்படம்தான், இன்று நேற்று நாளை. அறிவியலும் எமொஷனும் சம விகித்தில் கலந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவர், ரவிக்குமார் என்பவர் ஆவார். ரவிக்குமார் அவர்கள் தற்போது அயலான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ. ஆர். ரகுமான் இசையில் உருவான அயலான் திரைப்படம் ஆனது எப்போது வெளிவரும் என்ற பதிலுக்கு விடை கிடைக்காதவாறு சிக்கலில் மாட்டியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அவர்களின் மீது ஒரு அவதூறு பரப்ப பட்டதாக இணையத்தில் பதிவுகள் அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

    ஆம்! மிகவும் பணிவான இயக்குனர் என்று பலராலும் கூறப்படும் இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை ஆணவத்துடன் அலட்சிய படுத்தியதாக கூறப்படுகிறது. சிலமபரசன் நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் பட பூஜையின் போது ரவிக்குமார் அவர்களை சீமான் சந்தித்து பேசியதாகவும், அப்படி சீமான் பேசுகையில் இவர் அலட்சியமாக சீமானை உதாசீனம் செய்வதுப்போல் இருந்ததாகவும் ஒரு சினிமா செய்தி தளத்தால் கூறப்பட்டுள்ளது.

    இந்த கருத்துக்கு இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். ரவிக்குமார் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது. ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று சொல்வது மிக பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

    இயக்குனரின் இக்கருத்துக்கு, அந்த செய்தி நிறுவனம் “மாநாடு பட பூஜை. நடிகர் சங்கம் எதிரில், சீமானும் சேரனும் உங்களிடம் பேசியது பொய்யா? பக்கத்திலிருந்த நான் பொய்யா? இதோ இந்த பதில் பொய்யா?” என இயக்குனரின் பதிவுக்கு பதில் மொழி தந்துள்ளார்.

    சினிமா வட்டராத்தில் தற்போது இது மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனருக்கு ஆதரவாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் களத்தில் குதித்து உள்ளதால் சமூக வலைத்தளம் காரசார உரையாடல்களால் நிரம்பி வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....