பிரதமர் மோடி குறித்து தவறாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினர் பாகிஸ்தான் கொடி மற்றும் அமைச்சரின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடி குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோவை கண்டித்து புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திரா காந்தி சதுக்கத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அசோக் பாபு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு பிரதமர் குறித்து தவறாக பேசிய பாகிஸ்தான் அமைச்சருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பாகிஸ்தான் கொடி மற்றும் பாகிஸ்தான் அமைச்சரின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போ போலீசார் தடுக்க முயன்றபோது இரு தரப்பினருக்குமிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாடகம் ஆடும் ரங்கசாமியை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்! அதிமுக வையாபுரி மணிகண்டன்