Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்லஞ்சம் வாங்கிய மருத்துவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

    லஞ்சம் வாங்கிய மருத்துவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை! அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

    அமெரிக்காவில் லஞ்சம் வாங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டியாகோ நகரைச் சேர்ந்தவர் 55 வயதான நரம்பியல் மருத்துவர் லோகேஷ் தண்ட்வாயா. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 

    லோகேஷ் தண்ட்வாயா கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்வதற்காக 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இது இந்திய ரூபாய் மதிப்பில் 27 கோடி ஆகும்.

    மைக்கேல் ட்ரோபாட் என்ற நபருக்கு சொந்தமான மருத்துவமனையில் அவர் இந்தக் கையூட்டை பெற்றதாக சொல்லப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டே மைக்கேல் ட்ரோபாட் மீது பல குற்ற வழக்குகள் சாட்சியங்களுடன் நிரூபனம் செய்யப்பட்டு அவருக்கு 63 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

    இந்நிலையில், நரம்பியல் மருத்துவரான லோகேஷ் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 60 மாதங்கள் அதவாது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் எப்போது வழங்கப்படும்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....