ஏடிஎம் மையங்களில் அனுமதிக்கப்பட்ட இலவச பரிவர்த்தனைக்கு மேல் நடைபெறும் பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் உயர்ந்துள்ளது.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது தற்போதைய சூழலில் பிரதான ஒன்றாக இருந்து வருகிறது. ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை என்பது வங்கிக் கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம் அட்டை மூலம் ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் நடைபெறும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுவது வாடிக்கை.
இந்நிலையில், இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1 அதிகரித்து ரூ.21 ஆக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த கட்டண உயர்வானது இன்று (ஆகஸ்ட் 18) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், வங்கிகளுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடும்.
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம் மையங்களில் மாதத்திற்கு 5 முறையும், பிற ஏடிஎம் மையத்தில் 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பரிமாற்றங்கள் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.