Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை., அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்

    ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை., அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்

    ஆறுமுகசாமி ஆணைய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்று அதிமுக முன்னாள் சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 2022 மார்ச் 7 முதல் ஆறுமுகசாமி ஆணையத்தால் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என மொத்தம் 159 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டது.

    5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 600 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை சசிகலா, மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து புதுக்கோட்டை அடுத்த கட்டியாவயலில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. ஒரு அமைச்சராக நான் என் கடமையை செய்த நிலையில் ஆணைய அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. தனக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம்’ என அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: தீபாவளி வசூல்! 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையா? முதலிடம் பிடித்த நகர் எது தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....