தமிழக அரசின் மருத்துவ பணியில் 889 மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது
தமிழக அரசின் மருத்துவ பணியில் 889 மருந்தாளுநர் (Pharmacist) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி,
- இப்பணியிடங்களுக்கு இன்று (10.08.2022) முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை www.mrb.tn.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
- இந்த பணியிடங்களுக்கு கணினி வழி அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 1.7.2019 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57-க்குள் இருக்க வேண்டும்.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து, பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பதிவை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருந்தாளுநர்களுக்கு சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை www.mrb.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
குரூப் சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு