இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இன்று கிழக்கு ஜாவா மாகாணத்தின் சரியான்ஜங்-ஹிலிர் பகுதிக்கு 14 கி.மீ. தொலைவில், 123.7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் அது 5.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் அந்நாட்டு தலைநகர் ஜகார்தா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கியுள்ளன. உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முன்னதாக, கடந்த 6-ஆம் தேதி கிழக்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. இதுமட்டுமல்லாமல், இந்தோனேசியாவில் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 350-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.