Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்து நிலையங்கள் அறிவிப்பு!

    ஆயுத பூஜைக்கான சிறப்பு பேருந்து நிலையங்கள் அறிவிப்பு!

    ஆயுத பூஜை விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

    ஆயுத பூஜையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்திருந்தார். 

    கோயம்பேடு உள்ளிட்ட 3 முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், சென்னையிலிருந்து தினந்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 

    அதன்படி தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 

    திண்டிவனம் வழியாகத் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போரூர்,சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சு ,மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்,சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ,மேலும் புதுச்சேரி சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் மாநகர போக்குவரத்துக் கழகம் பூந்தமல்லி பணிமனை அருகிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: 

    வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இந்த இடத்திலிருந்து இயக்கப்படும். 

    கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: ஈ.சி.ஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இந்த இடத்திலிருந்து இயக்கப்படும்.

    மேலும், மயிலாடுதுறை தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை,திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் ,பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் ஆகிய ஊருக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனப் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: இனி மெரீனாவுக்கு போனா கவலை வேண்டாம்-சென்னை மாநகராட்சி புதிய திட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....