அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை வசப்படுதியதிலிருந்து தினம் ஒரு அதிர்ச்சிகரமான செயலை, தகவலை அறிவித்துக்கொண்டே இருக்கிறார். ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நடவடிக்கை பெரும் சர்ச்சையையும், ஆச்சரியத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான முடிவுகளை எடுத்தது. அதன்படி, மெட்டாவின் வருவாய் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்துள்ளதால், மெட்டாவின் பணியாளர்கள் எண்ணிக்கையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000- க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ட்விட்டர் மற்றும் மெட்டாவைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முதல்கட்டமாக அமெரிக்காவில் இந்த பணி நீக்கம் செயல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அமேசான் நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்றும், அந்த பணியில் இருப்பவர்களை முதல் கட்டமாக நீக்க முடிவு செய்துள்ளதாகவும், அதே சமயம் அவர்கள் காலியாக உள்ள பிற பணிகளுக்கு விண்ணப்பிக்காலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: விமான பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை – மத்திய அரசு அறிவிப்பு