Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வனின் அடுத்தப் பாகம் எப்போது? - வெளிவந்த தகவல்

    பொன்னியின் செல்வனின் அடுத்தப் பாகம் எப்போது? – வெளிவந்த தகவல்

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பற்பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வனை இயக்கி வெளியிட்ட சந்தோஷத்தில் தற்போது மணிரத்னம் இருக்கிறார். 

    பொன்னியின் செல்வன் திரைப்படமோ 500 கோடி என்ற மாபெரும் வசூலை நோக்கி  வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

    தற்போது, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பொன்னியின் செல்வன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்ற ஆவல் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டது. 

    பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் வெளியீடு தொடர்ந்து கேள்வியெழுப்பிய வண்ணம் ரசிகர்கள் இருந்தனர். இச்சூழலில், இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்து உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பங்குபெற்ற இன்டர்வீயூ ஒன்றில் தெரிவித்துள்ளார். 

    அதன்படி, அடுத்த வருடம் ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்கபன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....