ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.265 ப்ரீபெய்ட் ரீஜார்ஜ் திட்ட முறையில் மாற்றம் செய்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு பிரீபெய்ட் சேவையில் ஜியோ, வோடாஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களே முன்னிலை வகித்துவருகிறது. இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே தன்வசம் இருந்த பிரீபெய்ட் திட்டத்தில் மேலும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல் பிரீபெய்ட் முறையில் ரூ.265-க்கு ரீசார்ஜ் திட்டமுள்ளது. இத்திட்டத்தின்படி, வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி ரூ.265-க்கு ரீசார்ஜ் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் பெறுவர்.
இந்த மாற்றத்தின் மூலம் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் முன்பை விட கூடுதலாக இரண்டு நாள் சேவையையும், நாளொன்றுக்கு 500எம்பி டேட்டாவையும் பெறுவர்.
தயார் நிலையில் 5ஜி ஏலம்- 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்