மத்திய பிரதேசத்தில் விமானப்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. மொரானா என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
According to local police sources, it’s still not clear which craft, whether a Mirage 2000, Sukhoi Su-30MKI or any other craft has crushed. As per local sources, villagers saw fire from one of the 2 crafts which were seen in air. @NewIndianXpress @TheMornStandard @santwana99 pic.twitter.com/FSORQyaZmG
— Anuraag Singh (@anuraag_niebpl) January 28, 2023
முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அங்கு மீட்டுப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.
இந்தச் செய்தி உறுதி செய்யப்படுவதற்குள்ளாகவே, மத்திய பிரதேசத்தில் இரண்டு விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சற்று நேரத்திற்குள் ஆகவே அடுத்தடுத்து மூன்று விமானங்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்துகள் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவனுக்கு ‘நோ’ சொன்னாரா அஜித்குமார்? – ஏகே 62 குறித்து வெளிவந்த தகவல்!