ஏகே-62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசிவருகின்றன.
தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது.
துணிவைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே-62’ என்றும் பெயரிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஏகே-62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இத்திரைப்படத்தில் சந்தானம், அரவிந்த் சாமி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில், ஏகே-62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசிவருகின்றன. மேலும், ஏகே-62 திரைப்படத்தை விஷ்ணுவர்தன் அல்லது மகிழ்திருமேனி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது சமந்தமான கருத்துகள் ட்விட்டரில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘அம்புட்டும் பொய்யா’ – கே.எல்.ராகுல் திருமண பரிசுகள் குறித்து வெளிவந்த தகவல்!