திமுக அமைச்சர்களுக்கு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் தேவைப்படுவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தன்னை பொறுத்தவரை முதல் அமைச்சரின் கட்டுப்பாட்டில் கட்சியும் அவரது அமைச்சர்களும் இல்லை என தோன்றுவதாக குறிப்பிட்டு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே திருச்சியில் ஒரு அமைச்சர் தனது சொந்த கட்சிக்காரரையே அடித்தாகவும் கீழே இறங்கு என கூறி அடித்தாகவும் ஆனால், அவரை மேலே உட்கார வைத்தது தொண்டர்கள் தான் என்பதையே மறந்து செயல்படுவதாக கூறிய ஜெயக்குமார், தொண்டர்களை மதிக்காத எந்த கட்சியும் உருப்படாது என தெரிவித்தார்.
மேலும் மற்றொரு அமைச்சர் கல்லை தூக்கி எரிவதாகவும், இவர்களுக்கு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் தேவை என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தொண்டர் மீது கல் வீசியதும், அமைச்சர் கே.என்.நேரு தொண்டர்களை துரத்தி அடிப்பது போன்றும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பழமையான மொழி தமிழ்- ஆளுநர் ஆர்.என்.ரவி