Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

    துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

    துருக்கி நாட்டின் தெற்குப் பகுதிகளில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

    துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது. இதுவரையில், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரித்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், இந்நிலநடுக்கத்தால் முடுக்கவிடப்பட்ட மீட்பு பணிகள் முடிவுற்ற நிலையில் கட்டிடங்களை தகர்க்கும் பணிகள் துருக்கியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணியில் துருக்கியில் மட்டும் பல்வேறு பகுதிகளில் ஒருலட்சத்து 60 ஆயிரம் அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. 

    இந்நிலையில், துருக்கி நாட்டின் தெற்குப் பகுதிகளில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய நிலநடுக்கத்தால் சேதமடைந்திருந்த 24- க்கு மேற்பட்ட கட்டடங்கள் இந்த புதிய நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 69 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இதனிடையே, துருக்கியில் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிதாக வீடுகள் கட்டும் பணிதொடங்கப்பட்டுள்ளதாக துருக்கி பேரிடர் மற்றும் அவசரகால நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ‘வரலாறும் துரோகம்தான்’ – அகிலன் படத்திலிருந்து வெளியான பாடல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....