ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள அகிலன் படத்திலிருந்து பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அவரின் நடிப்பில் வெளிவர உள்ள படம் அகிலன்.
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்து வரவேற்பை பெற்ற பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன்தான் அகிலன் படத்தையும் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படக்குழு சார்பில் அகிலன் வருகிற மார்ச்- 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அகிலன் படத்திலிருந்து ‘துரோகம் பண்ணு’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் அரசியல்வாதிகளையும் முதலாளிகளையும் கிண்டல் செய்யும் வகையில் வரிகளை அமைத்துள்ளார்.
‘சிம்பு அப்படி வந்தது சங்கடமாகத்தான் இருந்தது’ – பத்து தல இயக்குநர் பேச்சு!