மிதிவண்டி ஓட்டிக்கொண்டே இளம்பெண் ஒருவர் நடனம் ஆடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு புதுவிதமான காணொளி வைரல் ஆகி வருகிறது. அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தால் அதில் ஒன்றுமே இருக்காது; சிறிய விஷயமாக இருப்பது தான் பெரிய அளவிலும் பேசப்படுகிறது. அப்படியான காணொளிகளின் வரிசையில் ஒரு பெண் செய்யும் சாகச காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புஷ்ரா என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான கணக்கு ஒன்றை நிர்வகித்து வருகிறார். மேலும் இதில் 7.45 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் மிதிவண்டி ஓட்டிக்கொண்டு நடனமாடும் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இது போன்றே பல காணொளிகளை அவர் வெளியிட்டுள்ளார். மிதிவண்டி ஓட்டிக்கொண்டே இவர் செய்யும் செயல்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மிதிவண்டியின் இரு கைப்பிடிகளையும் இவர் பிடிக்காமல் நடனம் ஆடும் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதே சமயம், பாராட்டுகளை பெற்றாலும், இப்படி விபரீதமாக நடனம் ஆடுவதில் ஆபத்தும் உள்ளது என நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
View this post on Instagram
ஹாக்கி உலகக் கோப்பை; இந்தியா யாருடன் மோதப்போகிறது?