இந்தியாவில் 15-ஆவது ஆடவர் உலகக் கோப்பைத் தொடர் இன்று முதல் நடைபெறுகின்றன.
இந்தியாவில், சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15-ஆவது ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இன்று ஹாக்கி உலகக் கோப்பையின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இன்றைய நாளில், இந்தியா-ஸ்பெயின், இங்கிலாந்து-வேல்ஸ், ஆஸ்திரேலியா – பிரான்ஸ், அர்ஜென்டினா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இவற்றுள், அர்ஜென்டினா- தென்னாப்பிரிக்கா அணி மோதும் ஆட்டமானது புவனேசுவரத்தில் நண்பகல் 1 மணிக்கும், இதே மைதானத்தில் ஆஸ்திரேலியா – பிரான்ஸ் ஆட்டம் 3 மணிக்கும் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து – வேல்ஸ் ஆட்டம் 5 மணிக்கு ரூர்கேலாவிலும் நடைபெறவுள்ளது.
மேலும், இந்தியா மற்றும் ஸ்பெயின் மோதும் ஆட்டம், உலகின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமான ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் இதுவரை 30 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், இந்தியா 13 ஆட்டங்களிலும், ஸ்பெயின் 11 ஆட்டங்களிலும் வென்றிருக்கின்றன. 6 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.
இந்தியா vs இலங்கை: தடுமாறிய இந்திய அணிக்கு கைக்கொடுத்த கே.எல்.ராகுல்!