திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண் உயிர் இழந்த சம்பவம் தென்காசியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விவசாயியாக உள்ளார். இவரது மகள் பிரியா. இவருக்கு 24 வயதாகிறது. கல்லூரியில் படிப்பை முடித்து வீட்டில் இருக்கும் பிரியாவுக்குப் பெற்றோர் திருமணம் செய்ய வரன் பார்த்து வந்தனர்.
ஆனால், பிரியா தனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை எனத் தொடர்ந்து மறுத்துவந்தார். ஆனால் பெற்றோர் விடாப்பிடியாக அவரைத் திருமணம் செய்ய வலியுறுத்தினர். இருப்பினும் பிரியாவிற்கு பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர்.
இதனால், பிரியா மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதைத்தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்தார். மாலையில் வீட்டுக்கு வந்த கணேசன் தன் மகள் மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
அங்கு கடந்த நான்கு நாள்களாக சிகிச்சையில் இருந்த பிரியா கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார். அவரது உடல் தென்காசி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை அறைந்த கணவனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!