ஸ்பெயினில் மனைவியை அறைந்த கணவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்பெயினில் உள்ள சொரியாவில் வசிக்கும் தம்பதி இடையே, டிக்டாக் வீடியோ லைவ் ஸ்ட்ரீம் பதிவின்போது திடீரென சண்டை உருவானது. அப்போது, லைவ் ஸ்ட்ரீம் பொழுதே கணவர் மனைவியை அறைந்திருக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அவர்கள் அடைந்தனர். மேலும், இது சமந்தமான வீடியோ வைரலானது.
இந்நிலையில், மனைவி முன்வந்து புகார் அளிக்காத போதும், வீடியோ பதிவினை ஆதாரமாக்கி நீதிமன்றமே முன்வந்து கணவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தது. வழக்கு விசாரணையின்போதும், கணவருக்கு எதிராக மனைவி குற்றம்சாட்ட மறுத்து விட்டார்.
இருப்பினும், வழக்கை தீவிரமாக விசாரித்த நீதிமன்றம் கணவருக்கான தண்டனையை உறுதியை செய்தது. தீர்ப்பின்படி, மனைவியை அறைந்த கணவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், 3 ஆண்டுகளுக்கு மனைவியை எந்த வகையிலும் தொடர்புகொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மனைவி புழங்கும் இடத்திலிருந்து 1000 அடி தள்ளியே கணவன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி; தடுமாறும் இந்திய அணி