Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'அனுபவத்தில் சொல்கிறேன்...' - வைரலாகும் செல்வராகவன் பதிவு

    ‘அனுபவத்தில் சொல்கிறேன்…’ – வைரலாகும் செல்வராகவன் பதிவு

    இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    திரையுலகில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கிய செல்வராகவன் தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

    சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்த செல்வராகவன், தான் இயக்கிய நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்தார். இதைத்தொடர்ந்து, சமீபத்தில் மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்த பாகாசூரன் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். 

    இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்.’ என்று பதிவிட்டுள்ளார். 

    செல்வராகவனின் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    கைலாசா நாட்டை ஐ.நா. அங்கீகரிக்கிறதா? ஐ.நா. சபைக் கூட்டத்தில் கைலாசா பிரதிநிதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....