சிக்கன் ரைஸ் சீக்கிரம் வராத காரணத்தால் அந்த ஓட்டலையே காலி செய்த வாலிபரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியில் சிக்கன் கார்னெர் என்ற ஓட்டலுக்கு ஒரு வாலிபர் சென்றார். மேலும் அவர் சிக்கன் ரைஸ் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தார். அதற்கு அங்கு இருக்கும் மாஸ்டர், சிறிது நேரம் ஆகும் என்று சொல்லி காத்திருக்க கூறினார். அதற்கு அந்த வாலிபர், அதெல்லாம் முடியாதது எனக்கு தான் முதலில் தர வேண்டும் என பதிலுக்கு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, கடையின் உரிமையாளரான சிராஜுதீன் வாலிபரை சமாதானம் செய்ய முயற்சித்தார். பிறகு, அங்கிருந்து சென்ற அந்த நபர், சிறது நேரம் கழித்து தனது நண்பர்களுடன் அக்கடைக்கு வந்து அங்குள்ள பொருள்களை சேதப்படுத்தி கடையை முழுவதுமாக சூறையாடினார்.
மேலும் அக்கடையின் உரிமையாளரான சிராஜுதினை தலையில் தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கரந்தையைச் சேர்ந்த தகராறு செய்த சரண் ராஜ், விக்னேஷ், கிறிஸ்தவ ராஜ் ஆகிய மூன்று வாலிபர்களை தஞ்சை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்பரேஷன் திரிசூளம் திட்டம்: ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை..!