சென்னை, மெரினா கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது கடற்படை பேருந்து மோதி விபத்து ஏற்பட்டத்தில் கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, மெரினா கடற்கரை சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுநரின் கவனக்குறைவால் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதினார்.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி லலிலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, கடற்படை வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுனரை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்ததோடு, காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் கடற்படை பேருந்தையும் சேதப்படுத்தினர்.
லலிதாவின் வயிற்றில் இருந்த குழந்தையை காப்பற்றுவதற்காக மருத்துவமனைக்கு அவரது உடலை எடுத்து சென்றனர். இருப்பினும், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், 8 மாத குழந்தையும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, லலிதாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த பெண்ணின் கணவர், சிவா ரெட்டி கடற்படையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி கூட திருமணத்தை நிறுத்தலாமா? லெஹன்ஹா உடையால் மணமகள் அதிர்ச்சி