கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கார் திடீரென தீப்பிடித்ததில் அவரும் அவரது கணவரும் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் அருகே பெண் ஒருவருக்கு பிரசவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றனர்.
காரின் முன்பகுதியில் கர்ப்பிணி பெண் அமர்ந்திருக்க, காரை கர்ப்பிணி பெண்ணின் கணவர் ஓட்டி சென்றார். காரின் பின்பகுதியில் அவர்களின் உறவினர்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது காருக்குள் கரும்புகை வரத் தொடங்கியது. இதையடுத்து தீ பற்றத் தொடங்கியது.
தீ பரவுவதை கண்டதும் கார் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தீ அதற்குள் கார் முழுவதிலும் பரவியது. இதன் காரணமாக, முன்பக்க கதவுகள் திறக்க முடியாமல்போன நிலையில், கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும் இந்த தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.
பின் பக்கமாக அமர்ந்திருந்த உறவினர்கள் கதவை திறந்து உயிர் தப்பினர். மேலும், இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ்-அப் விதிமுறை மீறல்: இந்தியாவில் லட்சக்கணக்கில் கணக்குகள் முடக்கம்!