இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீறியதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்-அப் செயலி உலக முழுவதும் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையம் என்று வந்துவிட்டால் வாட்ஸ்-அப் என்பது அனைவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு வாட்ஸ்-அப் இடம் பிடித்துள்ளது. இதற்கென தனிப் பயனர்கள் ஏராளம்.
இளைஞர் முதல் பெரியவர் வரை இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம், இந்தச் செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் இந்த வாட்ஸ்-அப் இந்தியாவிலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் இதில் 13,89,000 வாட்ஸ்-அப் கணக்குகளை எந்தவித முன் அறிவிப்பு இன்றி வாட்ஸ்-அப் நிறுவனம் முடக்கி உள்ளது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 26.85 லட்சம் கணக்குகளை வாட்ஸ்-அப் நிறுவனம் முடக்கியுள்ளது.
இபிஎஸ் அளித்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யக்கோரி ஓபிஎஸ் பதில் மனு