பிலிப்பைன்சில் நடுக்கடலில் பயணித்த பயணிகள் கப்பல் தீப்பிடித்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் என்ற நகரில் இருந்து பயணிகள் கப்பல், தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது. அந்த நேரத்தில், துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கப்பல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கப்பல் முழுவதும் தீ பரவி சென்றதால், பலர் கடலில் குதித்தனர். உடனே அருகில் இருந்த கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், இருவர் காணவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கப்பலின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்தாகவும் சொல்லப்படுகிறது.
BREAKING 🇵🇭 : A #Philippines ferry with 82 passengers & crew on board caught fire as it was approaching a port south of #Manila.
♦️At least 73 people have been saved, according to coast guard officials. pic.twitter.com/ogbuUmTD6b
— Zaid Ahmd (@realzaidzayn) August 26, 2022
சென்னையில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல்.. பரபரப்பில் பயணிகள்!