சென்னையில் விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக தகவல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு துபாய் புறப்பட இண்டிகோ விமானம் தயாராக இருந்தது. ஆனால், எப்போதும் போல் இண்டிகோ விமானம் புறப்படவில்லை. ஆம், தொலைபேசி வாயிலாக வந்த ஒரு தகவல் விமானம் புறப்படுவதை தடுத்தி நிறுத்திவிட்டது.
துபாய் புறப்பட தயாராக இருந்த அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி வழியாக மர்ம நபர் தகவல் தெரிவித்துள்ளார். இப்பபடியாக தகவல் வந்ததை அடுத்து, உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், வெடிகுண்டு குறித்த தகவலால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இண்டிகோ விமானத்தில் 167 பயணிகள் பயணிக்க விருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வெடிகுண்டு குறித்து வந்த தகவலால் பதட்டமடைந்துள்ளனர் என்றும், சோதனை முழுவதுமாய் முடிந்த பிறகு மீண்டும் இண்டிகோ விமானம் இயக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.