Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்சூரியனில் புதிதாய் உருவாகியுள்ள கரும்புள்ளி.. பூமியை விட மூன்று மடங்கு பெரியதாம்!!

    சூரியனில் புதிதாய் உருவாகியுள்ள கரும்புள்ளி.. பூமியை விட மூன்று மடங்கு பெரியதாம்!!

    சூரியனில் புதிதாக ஒரு கரும்புள்ளி உருவாகியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியைப் பார்த்தபடி இருக்கும் இந்த கரும்புள்ளியானது சமீப காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

    சூரியனில் உருவாகியுள்ள இந்த கரும்புள்ளிக்கு ஏஆர்3038 என்று பெயரிட்டுள்ளனர். பூமியை விட மூன்று மடங்கு பெரியதாய் உருவாகியுள்ள இந்த கரும்புள்ளியினால் சூரியனிலிருந்து சக்திவாய்ந்த ஒளிக்கதிர்வீச்சுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கரும்புள்ளிகள் (sun spots) மற்றும் சூரிய ஒளிக்கதிரவீச்சுகள் (solar flares).. 

    அதீத சக்தியுள்ள மின்காந்தப்புலங்களினால் சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. பொதுவாக இந்த கரும்புள்ளிகள் சூரியனின் மற்ற பகுதிகளை விட குறைவான வெப்பநிலையினைக் கொண்டிருக்கும். பொதுவாக இப்பகுதிகளில் 3,593 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

    சூரிய ஒளிக்கதிவீச்சுகள் இந்த கரும்புள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுகின்றது. சூரியனில் ஏற்படும் திடீர் ஆற்றல் வெடிப்புகளால் இந்த வகையான ஒளிக்கதிர்வீச்சுகள் வெளியிடப்படுகின்றன.

    வான்வெளியில் பரவும் இந்த ஒளிக்கதிர்வீச்சுகள் ஆபத்தானவையாகக் கருதப்படுகிறது. பூமியில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களுக்கு பெரும் சேதத்தினை இந்த சூரிய ஒளிக்கதிர்வீச்சுகள் உருவாக்குகின்றன.

    தற்போது உருவாகியுள்ள ஒளிக்கதிர்வீச்சினால் என்ன நிகழும்?

    சூரியனில் உருவாகியுள்ள இந்த கரும்புள்ளியினால் ஆபத்துகள் உருவாகும் என்று இதுவரை எந்த விதமான எச்சரிகைகளும் விஞ்ஞானிகளிடமிருந்து வரவில்லை. இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த கரும்புள்ளியானது இருமடங்கு பெரிதாகியுள்ளது. இந்த செய்தியானது பலரை பதட்டம் கொள்ள வைத்துள்ளது.

    சூரியனில் ஏற்படும் இந்த கரும்புள்ளிகள் சாதாரண நிகழ்வு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தகைய கரும்புள்ளிகள் சூரியனின் மேற்பகுதியில் அடிக்கடி தோன்றும் ஒன்று என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    கரும்புள்ளிகள் அளவினைப்பொறுத்து அவற்றின் ஆற்றலின் மதிப்பு அளவிடப்படுகிறது. இவற்றின் அளவுகளை ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைப்படி வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலத்தின் முதல் எழுத்தான ‘ஏ’ (A) வகைக் கரும்புள்ளிகள் குறைவான ஆற்றலுடையதாகவும் ‘இசட்’ (Z) வகை கரும்புள்ளிகள் மிகவும் ஆபத்தானவையாகவும் கருதப்படுகிறது.

    பல குழந்தைகள் நிலநடுக்கத்தில் இறந்திருக்கலாம்.. ஆப்கானிய மருத்துவர்கள் வேதனை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....