Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜீவசமாதி என்ற பெயரில் அட்டூழியம்! சாமியார்களிடமிருந்து இளைஞரை உயிருடன் மீட்ட பரபரப்பு வீடியோ..

    ஜீவசமாதி என்ற பெயரில் அட்டூழியம்! சாமியார்களிடமிருந்து இளைஞரை உயிருடன் மீட்ட பரபரப்பு வீடியோ..

    உத்தரப்பிரதேசத்தில் முக்தி அடைய வைப்பதாக கூறி உயிருடன் ஒருவரை சமாதி கட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள உன்னவ் பகுதியில் இளைஞர் ஒருவருக்கு முக்தி தருவதாக உள்ளூர் சாமியார்கள் கூறியுள்ளனர். நவராத்திரி தொடங்குவதற்கு முந்தைய இரவில் ‘நீ ஜிவசமாதி அடைந்தால் உனக்கு முக்தி கிட்டும்’ என அவர்கள் அந்த இளைஞனிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

    அந்த இளைஞனும் ஒப்புக்கொள்ளவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அந்த சாமியார்கள் தொடங்கியிருக்கின்றனர். அதன்படி, பள்ளம் தோண்டி அந்த இளைஞனை உயிருடன் உட்கார வைத்து அதன்மேல் மூங்கில் கொம்புகளை போட்டு அதற்கு மேல் களிமண்ணை போட்டு புதைத்துள்ளனர். 

    இந்த சம்பவம் எப்படியோ உன்னவ் காவல்துறைக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, உடனடியாக  உன்னவ் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தது. இதையடுத்து அந்த இளைஞனை காவல்துறை மீட்டது. 

    இந்நிலையில், முக்தி அடைய விரும்பிய நபர் மீதும், மூன்று சாமியார்கள் மீதும் உன்னவ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இந்த சம்பவம் தொடர்பான காணொலி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் அடுத்த திருப்பம்! பெற்றோர் மீதே குற்றம்சாட்டிய சிபிசிஐடி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....