நாட்டில் சமீப காலமாகவே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில இடங்களில் ஓடும் ரயில் முன்பு செல்பி எடுப்பது போன்ற சாகசங்கள் செய்வதின் மூலம் விபத்துகள் ஏற்படுகின்றன.
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை, இளைஞர் ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்ட சம்பவம் இன்றளவும் பெரும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஓடும் ரயில் உள்ளே இரு இளைஞர்கள் மோதிக்கொண்டு ஒருவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பீர்பூம் என்று அப்பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்தக் காணொளியில், சிறுவன் ஒருவர் அங்குள்ள சக பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறி அந்தச் சிறுவனை அந்த பயணி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
This is totally Shocking…
from #WestBengal
After an altercation a passenger pushed another out of a moving express train & coolly went back to his seat.#IndianRailwayspic.twitter.com/wO0JuBmddX
— मुंबई Matters™✳️ (@mumbaimatterz) October 17, 2022
இதையும் படிங்க: ஆர்பிஐ அதிகாரிகளுக்கு எதிராக சுப்பிரமணியசுவாமி தொடுத்த வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு