சச்சின் டெண்டுல்கரும், ஏ.ஆர். ரகுமானும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றன.
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன், கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் உலகளவில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் என்பது பற்பல. இந்திய கிரிக்கெட் வீரர் என்றாலும் உலகளவில் இவருக்கென்று பெரும் ரசிக கூட்டம் எப்போதுமே உண்டு.
கிரிக்கெட் துறையில் இவரென்றால், உலகளவில் இசைத்துறையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கார் விருதுகளை இவர் வென்று உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தை எவராலும் மறக்க முடியாது.
இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது சமூகவலைதளத்தில் பதிவேற்றினார். மேலும், “மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுடன்” என அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
A Sunday well spent with இசைப்புயல்! ♥️🎶 https://t.co/nDB5m3Bh5R
— Sachin Tendulkar (@sachin_rt) October 17, 2022
இதைத்தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கர், ஞாயிற்றுக்கிழமை இசைப்புயலுடன் சிறப்பாக சென்றது என்று தெரிவித்துள்ளார். தனது பதிவில் ‘இசைப்புயல்’ என்பதை தமிழிலேயே சச்சின் உபயோகப்படுத்தியுள்ளது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் 10 குழந்தை திருமணங்கள்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்