கரீபியன் நாடான சின்ட் மார்டனில் குரங்குகளை கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெர்வெட் இன குரங்குகள் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. இந்த வகை குரங்கு இனம் 17 ஆம் நூற்றாண்டில் கரீபியன் தீவுப் பகுதிகளுக்கு சென்றன. இந்நிலையில், கரீபியன் நாடான சின்ட மார்டனில் ஒட்டுமொத்த வெர்வெட் குரங்குகளை அழைக்க அந்நாடு ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ‘வெர்வெட்’ இன குரங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தையே அழித்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், வெர்வெட் குரங்குகளை அழிக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
அதேசமயம், குரங்குகளைக் கொள்வதற்கு பதிலாக அவற்றுக்கு கருத்தடை செய்வது சிறந்த வழி என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு நிதியுதவியை பயன்படுத்தி அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 க்கும் அதிகமான குரங்குகளைப் பிடித்து கொலை செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிஜத்தில் பாலியல் வன்முறை, கனவில் பாம்புகள் – டிராகனாக தன்னை மாற்றிக்கொண்ட திருநங்கை!