Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒரு கையில் புல்லட்.. இன்னொரு கையில் பீர் பாட்டில்.. வைரல் காணொளி

    ஒரு கையில் புல்லட்.. இன்னொரு கையில் பீர் பாட்டில்.. வைரல் காணொளி

    உத்தர பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஒரு கையில் பீர் பாட்டிலுடன் வண்டி ஓட்டும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

    உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் நகரில் தில்லி-மீரட் சாலையில் புல்லட் வண்டியில் நபர் ஒருவர் தலைக்கவசம் கூட அணியாமல் பயணம் மேற்கொண்டுள்ளார். 

    அதோடு அவர், தனது ஒரு கையில் வண்டியைக் ஓடிக்கொண்டு மறு கையிலே பீர் பாட்டிலை எடுத்து குடித்து சாகச பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை வேறொரு வாகனத்தில் வந்தவர் காணொளியாக எடுத்துள்ளார். 

    இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் போக்குவரத்து காவல்துறையின் கவனத்திற்கு செல்ல, அந்த நபரை காவல்துறையினர் தேடி பிடித்தனர். மேலும் அவருக்கு 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    அந்த புல்லட் வண்டி நூர்பூரைச் சேர்ந்த சுரேந்திர குமார் என்பவரின் மகன் அனுஜ் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் மீது பல்வேறு போக்குவரத்து சட்ட விதி மீறல்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....