Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்மாதவிடாயின் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்!

    மாதவிடாயின் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்!

    பொதுவாக அனைத்து பெண்களுக்கும் மாதவிடாயின் போது சிறு சிறு பிரச்சனைகள் இருப்பது வழக்கம் தான். குறிப்பாக ஆதி வயிற்று வலி, உடல் சோர்வு, மந்தம், பசியின்மை, அதிக உத்திரப்போக்கு அல்லது குறைந்த உத்திரப்போக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும். இவற்றுக்கு மாத்திரையோ மருந்துகளோ தேவையில்லை சரியான உணவு முறையை கடைபிடித்தாலே போதுமானது. 

    காய்களும் பழங்களும் மிக முக்கியம்:

    சில பெண்கள் பசியின்மையின் காரணமாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். ஆனால், மாதவிடாயின் போது தான் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக காய்களையும் பழங்களையும் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் தான் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. 

    தண்ணீர் குடிப்பது கட்டாயம்: 

    பெண்கள் வேலையின் காரணமாக என்ன செய்கிறோம் என்பதை ஓட மறந்து விடுவார்கள். உணவு உண்டுவிட்டு தண்ணீர் அருந்த மறந்துவிடுவார்கள். அப்படி இருக்கவே கூடாது. தண்ணீர் உடலின் தன்மையை சீராக நிறுத்த உதவுகிறது. இதனால் மாதவிடாயின் போது உடல் சமநிலையாக வைத்திருக்க உதவும். 

    கடல் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது: 

    கடல் உணவுகளான மீன், நண்டு போன்றவற்றை சேர்த்துக் கொள்வது மேலும் சத்துக்களை தரும். குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இவற்றில் அதிகம் இருப்பதால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அடிவயிறு வலியையும் இடுப்பு வலியையும் குறைக்க உதவும். கடல் உணவு பிடிக்காது என்பவர்கள் சோயாபீன்ஸ் மற்றும் ஆலிவ் விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. 

    டார்க் சாக்லேட் உண்ணுவது நல்லது: 

    இந்த சமயங்களில் பொதுவாக இனிப்பு சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் டார்க் சாக்லேட் சாப்பிடலாம். காரணம் இதில் இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த டார்க் சாக்லேட் அதற்கு மட்டுமல்ல மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் குழப்பம் பதற்றம் போன்றவற்றைக் குறைக்கவும் உதவுகிறது. 

    கீரை மிக மிக முக்கியம்: 

    சில பெண்களுக்கு அதிக உதிரப் போக்கின் காரணமாக இரத்தசோகை போன்ற குறைபாடுகள் வர வாய்ப்புகள் உண்டு. இரத்தசோகை இரும்புச் சத்து குறைவதால் ஏற்படும் குறைபாடு ஆகும். அதனால் பெண்கள் இரும்புச் சத்து மிக்க கீரை வகையையும் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக முருங்கை கீரை சாப்பிடுவது மிகவும் நல்லது. 

    பாலும் தயிரும்: 

    பால் மற்றும் தயிரில் அதிக படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ள. அதனால் இவற்றை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது அவசியம். மாதவிடாயின் போது இடுப்பு வலி கை கால் வலி ஏற்படுவதை இது குறைக்க உதவும். பால் தயிர் பிடிக்காது என்பவர்கள் வெண்டைக்காய், பாதாம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். 

    மாதவிடாயின் போது எந்த காரணத்தையும் கொண்டு உணவை மட்டும் தவிர்க்காமல் இருப்பதே நல்லது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....