Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுகவினால் தமிழகத்தில் கெடுசூழல் நிலவுகிறது - ஓபிஎஸ் பாய்ச்சல்!

    திமுகவினால் தமிழகத்தில் கெடுசூழல் நிலவுகிறது – ஓபிஎஸ் பாய்ச்சல்!

    “நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்.” என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு மாறாக நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற சூழ்நிலை மாறி, ‘அமைதியின்மை, வளமின்மை, வளர்ச்சியின்மை’ என்ற சூழல் கடந்த பதினோறு மாதங்களாக நிலவி வருகிறது என்றும் காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி, ரவுடிகளை கண்டு காவல் துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும், கொள்ளைகளும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது 

    அரசு அதிகாரிகளும், சிறு தொழிலதிபர்களும், வியாபாரிகளும், இன்னும் சொல்லப்போனால், காவல் . துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகள் அன்றாடம் நடைபெற்று வருவதாகவும், பல நிகழ்வுகளில் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது என்றும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

    இதற்கு உதாரணமாக, விருதுநகர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு செய்ததில் உள்ளூர் தி.மு.க.வினருக்கு பங்கு இருக்கிறது என்பதை ஓபிஎஸ் முன்வைத்தார். 

    இதேபோன்று, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தி.மு.க. பிரமுகர் என்றும் பின்னர் அந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், அந்த தி.மு.க. பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் இவையெல்லாம் ஆளுங் கட்சியினரால் ஏற்படும் அராஜகச் செயல்களுக்கு எடுத்துக்காட்டுகள் என்றும் பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்தார். 

    இதேபோல், மணல் கடத்தல், சாலை போடுதல் போன்ற பணிகளிலும் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது எனவும் ரவுடிகளின் அட்டகாசம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இளைஞர்கள் சீரழிவு 

     “ சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டு இருக்கிறார். அண்மையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதையும், இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருவதையும் அறிந்த காவல் துறையினர், அந்த இடத்திற்குச் சென்று அதனை தடுக்க முயன்றபோது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அதில் காவலர்கள் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல் துறையினரையே தாக்கும் அளவுக்கு ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது” என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

    சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக, மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சென்னை நகரின் பிரதானப் பகுதியான பாரிமுனையில் பட்டப் பகலில் தி.மு.க. பிரமுகர் திரு. சவுந்தரராஜனை மர்மக் கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளதை தன் அறிக்கையில் அவர் பதிந்துள்ளார். 

    தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், குறு, சிறு தொழிலதிபர்கள், வியாபாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இன்னும் சொல்லப் போனால் பாதுகாப்பினை வழங்கக் கூடிய காவல் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் ஓர் அச்ச உணர்வுடனேயே இருக்கிறார்கள் என்று பன்னீர் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.

    கெடுசூழல் 

    மொத்தத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதற்குக் காரணம் சமூக விரோதிகளின் பயமின்மை, பொது அமைதி இல்லை என்றால் தொழில் வளம் இருக்காது, தொழில் வளம் இல்லை என்றால் பொருளாதார வளர்ச்சி இருக்காது, பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால் வேலைவாய்ப்புகள் இருக்காது. வேலைவாய்ப்புகள் இல்லையென்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். இது ஒரு கெடுசூழல் என ஓபிஎஸ் தெரிவித்தார். 

    சுகாதாரம், செல்வ வளம், விளைபொருளின் வளம், இன்ப வாழ்வு, நல்ல பாதுகாப்பு ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி, அமைதியை நிலை நாட்டி, அதன்மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வதாக பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்தார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....