Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பீஸ்ட் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ரசிகர்கள் அதிர்ச்சி - முழு தகவல்கள் உள்ளே!

    பீஸ்ட் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ரசிகர்கள் அதிர்ச்சி – முழு தகவல்கள் உள்ளே!

    மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம்தான், பீஸ்ட்.  தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் திரைப்படமானது உருவாகியிருக்கிறது. படத்தினைப் பற்றிய அறிவிப்பு வந்த நாள் முதலே பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது அதிகரித்தே காணப்படுகிறது. 

    எதிர்ப்பார்ப்பு அதிகமாய் காணப்பட்ட பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடக்கோரி கடந்த சில வாரங்களாகவே விஜய் ரசிகர்கள் முறையிட்டு வந்தனர். 

    அதன் பலனாக கடந்த இரண்டாம் தேதி பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலர் அறிவிப்பு வந்த நாள் முதலே அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பீஸ்ட் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது. திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானப்பிறகு இந்த ட்ரெண்டிங் குறைந்து விடும் என்று எதிர்ப்பார்க்கையில், அதற்கு மாறாக ட்ரைலர் வெளிவந்தப் பின்னும் பீஸ்ட் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 

    பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர், பலரையும் கவர்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது. மேலும் விஜய் ரசிகர்கள் மத்தியில்  பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் என்பது மிகப்பெரிய கொண்டாட்டம். 2 நிமிடங்கள் 57 வினாடிகள் ஒளிபரப்பாகும் ட்ரைலரானது, முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது என்பதுதான் உண்மை. 

    மேலும், படத்தின் கதையை ட்ரைலர் முழுக்க முழுக்க கூறிவிட்டதாக பலர் தெரிவித்து வந்தாலும், பீஸ்ட் திரைப்படத்தில் ட்ரைலரில் சொல்லப்பட்டதைத் தாண்டியும் பல தருணங்கள் உள்ளதாக தெரிகிறது. படக்குழுவும் அப்படியான கருத்தைதான் முன்வைத்துள்ளது. 

    ட்ரைலர் தந்த நம்பிக்கையால் பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்கள், பீஸ்ட் திரைப்படத்தை வரும் 13 ஆம் தேதியில் திரையில் கண்டு கொண்டாடி மகிழ காத்திருக்கின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் பீஸ்ட் திரைப்படத்தை காண பலர் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்திற்காக காத்திருந்த ரசிகர்களும் பெறும் ஏமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆம்! பீஸ்ட் திரைப்படம் வெளியாகமல் இருக்கப்போவதுதான் அந்த ஏமாற்றத்திற்கான காரணம்.

    குவைத் நாட்டில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை என்று அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியிருப்பதாக காரணம் கூறி குவைத்தில் பீஸ்ட் வெளியாக தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், குவைத் பகுதிகளில் வாழும் தமிழர்களும் விஜய் ரசிகர்களும் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். படக்குழு திரைப்படத்தை அங்கு வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், பீஸ்ட் குவைத்தில் வெளியாக குறைந்த பட்சே வாய்ப்புகள் இருப்பதாக அறியப்படுகிறது.

    இதற்கு முன்பாக, எஃப் ஐ ஆர் , குரூப் போன்ற திரைப்படங்களும் இம்மாதிரியாக காரணங்கள் கூறப்பட்டு குவைத்தில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....