புதுச்சேரி மாநிலம் ஏனாமில் மனைவியுடன் இருந்த கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற மீனவர் போலீசார் அதிரடி கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் குரசம்பேட்டை, அப்துல்க லாம் நகரைச் சேர்ந்தவர் கொலட்டி ராம்பாபு (35), இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கொலட்டி தேவி (31) என்ற மனைவியும், ஒருமகனும், மகளும் உள்ளனர். ஆந்திர பகுதியான இங்கிராம் பகுதியில் வசிப்பவர் சங்காதி ராம்பாபு என்ற புஜி (34). மீனவர்களான கொலட்டியும், சங்காதியும் மீன் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது கொலட்டி ராம்பாபுவின் மனைவி கொலட்டி தேவியுடன், சங்காதி ராம்பாபுவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் அடிக்கடி வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.
இதை அறிந்த கொலட்டி தேவியின் கணவர் ராம்பாபு, மனைவி மற்றும் நண்பர் சங்காதியை பல முறை கண்டித்துள்ளார். சம்பவத்தன்று மனைவிக்கும் கணவருக்கும் ஏற்பட்ட தகராறில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனைவி தேவி கணவரை வீட்டைவிட்டு வெளியே துரத்தியுள்ளார். வெளியே சென்றிருந்த ராம்பாபு, இரண்டு தினங்களுக்கு பிறகு திடீரென வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மனைவி தேவியுடன் நண்பர் சங்காதி வீட்டில் தனியாக இருக்கவே அவரை தட்டிக் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம்பாபு, சங்காதியை மீன்வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் கழுத்தில் வெட்டுக்காயம் விழுந்த சங்காதியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஏனாம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஏனாம் போலீசார் கொலை வழக் குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்த சங்காதியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உற வினர்களிடம் ஒப்படைத்த நிலையில், தலைமறைவான கொலட்டி ராம்பாபுவை தனிப்படையினர் தீவிரமாக தேடினர். இதனிடையே நேற்று ஏனாம் எல்லையில் பதுங்கியிருந்த ராம்பாபுவை, எஸ்.பி. ரகுநாயகம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கௌதம் சிவகணேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கொலட்டியிடமிருந்து கைப்பற்றிய போலீசார் அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஏனாம் சப் சிறையில் அடைத்தனர்.
காசுவைத்து சூதாடிய 7 பேர் கொண்ட கும்பல் கைது!