குஷ்புவின் கண்டனத்திற்கு கனிமொழி பதில் அளித்து மன்னிப்பும் கோரியுள்ளார்.
திமுக நிர்வாகி சைதை சாதிக் மேடையில் பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியது. அவர் பேசியதாவது, பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள். குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி. நாங்கள் (திமுக) கட்சி வளர்த்தபோது, சீதாபதி, பலராமன், டி.ஆர்.பாலு என தற்போது இளைய அருணா (திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்) வரை கட்சி வளர்க்கிறார்கள். ஆனால், பாஜகவில் தலைவர்களைப் பார்த்தால் எனக் கூறி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகியின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளிவந்தன. இவற்றுள் குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்ததும் அடங்கும்.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நேற்று நடந்த சென்னை திமுக பொதுக்கூட்டத்தில் பெண்களை இழிவாக பேசிய சைதை சாதிக்..@Manothangaraj @arivalayam #MKStalin_Unfit_CM pic.twitter.com/rewyVuKym2
— Vinoth Kumar.V (@Vinothkumar2214) October 27, 2022
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பரில் ‘தளபதி 67’ – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்கள் பெண்களை தவறாக வசைபாடும்போது, அது அந்த ஆண்களின் வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தாங்கள் கருணாநிதியைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடலா?’ என்று பதிவிட்டிருந்தார். இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு அவர் டேக் செய்திருந்தார்.
I apologise as a woman and human being for what was said.This can never be tolerated irrespective of whoever did it,of the space it was said or party they adhere to.And I’m able to openly apologise for this because my leader @mkstalin and my party @arivalayam don’t condone this. https://t.co/FyVo4KvU9A
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 27, 2022
இதைத்தொடர்ந்து, குஷ்புவின் கண்டனத்திற்கு கனிமொழி பதில் அளித்து மன்னிப்பும் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் சலிக்காத விக்ரம் திரைப்படம்…கமல்ஹாசன் செய்யப்போகும் அடுத்த பிரம்மாண்டம்?
கனிமொழி தெரிவித்துள்ளதாவது;
ஒரு பெண்ணாகவும், மனுஷியாகவும் நான் அப்படி பேசப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும், அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. இந்தச் சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
கனிமொழியின் மன்னிப்பு பதிவுக்கு பதிலளித்துள்ள குஷ்பூ ,அதில் மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் எப்போதும் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்.உங்களை பணிகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Thank you so much Kani. Really appreciate your stand and support. But you have always been someone who has always stood up for women’s dignity and self respect. Humbled 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 https://t.co/i2mul5WqKO
— KhushbuSundar (@khushsundar) October 27, 2022