மேஷம் முதல் மீனம் வரை இந்த வாரத்திற்கான (11.2.2022 முதல் 18.2.2022 வரை) உங்கள் ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மேஷம் ராசி
மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10,11 லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து மற்றும் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய இனிய வாரமாக அமைகின்றது. இந்த வாரம் உங்களுக்கு மாற்றங்கள் நிகழ்ந்தேறும். உத்தியோகம், வீடு, தொழில், அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். பணவரவு உண்டாகும். வீடு, நிலம் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சுமுகமாக முடியும். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதனால் வண்டி வாகனங்களில் கவனம் தேவை. வார்த்தையில் தேன் தடவிய வார்த்தை பேசி வருவது நலம். பொறுமையுடன் இருக்கக்கூடிய மேஷராசி நேயர்களுக்கு புது பொறுப்புகள் கூடும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்க கணபதியை சரணடையுங்கள். சுபகாரியங்களுக்காக புதிய கடன்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள், பணி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும், சனிக் கவசம் படிப்பதாலும் வண்டி வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படும்.
ரிஷிப ராசி
ரிஷிப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ராகு ஜென்மத்திலும், 8-ல் செவ்வாய் சுக்கிரன் சஞ்சரிப்பதனால் நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். மாற்றங்கள் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது. குடும்பத்தில் அந்நியர் தலையிடுவதை தவிர்ப்பது நலம். அதேபோல் பிறர் குடும்பத்திலும் நீங்கள் தலையிட்டால் அது வீண் விவாதங்களில் போய் முடியும். பயணம் செய்யும் போது புதிய நபர்களின் அறிமுகத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சிந்தித்து எடுக்கும் முயற்சிகளால் அனுகூலன் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சிறுசிறு பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் அனுசரித்து நடந்து கொள்வது நலம்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள். முடிந்தவர்கள் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள். சகலவிதத்தில் ஏற்றங்களையும் அனுகூலங்களை ஏற்படுத்தி தரும்
மிதுன ராசி
மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வேற்றுமொழி மனிதர்களால் மிகப் பெரிய ஆதாயம் ஏற்படும். கடல் கடந்த பயணம் அனுகூலத்தை உண்டாக்கும். சுபக் காரியங்களில் ஏற்பட்ட தடைகள் விலகக் கூடும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், பேச்சில் நிதானம் கடைபிடித்தால் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் பிள்ளைபேறுகள் உண்டாகும். தந்தையாருடன் சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம். பெற்றோர்களின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழிலில் எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். புதிய கடன்கள் ஏற்பட்டாலும் அவை சந்தோஷத்தையே பெற்று தரும். பணி புரிபவர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையே உருவாகும்.
பரிகாரம்:
அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று வருவது நற்பலன்களை அதிகரிக்கும்.
மேலும் கடகம் முதல் கன்னி வரை படிக்க
மேலும் துலாம் முதல் தனுசு வரை படிக்க
மேலும் மகரம் முதல் மீனம் வரை படிக்க