Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் தொடருக்கான பணிகள் தீவிரம்

    தமிழகத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் தொடருக்கான பணிகள் தீவிரம்

    தமிழகத்தில் நடைபெற இருக்கும் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் தொடர் பணிகள் மும்மரமாக நடந்துவருகிறது. 

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் தொடர் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 87 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தப் போட்டிக்காக ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடிபரப்பில் சர்வதேச தரத்தில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே உள்ள 22 ஆயிரம் சதுரஅடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி அரங்கில் மொத்தம் 700 சதுரங்க போர்டு மேஜைகள் அமைக்கப்பட உள்ளது. இதுமட்டும் அல்லாது, ஏற்கனவே உள்ள 22 ஆயிரம் சதுரஅடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்படுகிறது. 

    போட்டியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகள் அமைத்தல், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்தல் போன்ற பணிகளும் நடந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    ஆகஸ்ட் 28-ம் தேதி 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் தொடரின் தொடக்கவிழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இத்தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உலக மக்கள் அறியும் வகையில் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூலை 18ம் தேதி திறப்பு.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....