சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43.6 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.
வங்கக் கடலில் நிலவு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாவே தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி தொடங்கி இரவு முழுவதும் கனமழை பெய்தது.
கனமழை காரணமாக சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43.6 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. மேலும் கொள்ளிடத்தில் 31 சென்டி மீட்டரும், செம்பனார் கோயில் பகுதியில் 24 சென்டி மீட்டர் மழையும், பொறையார் பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.
தேனூர், கொண்டால், புங்கனூர், தில்லைவிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உப்பனாற்று பகுதியில் அமைந்துள்ளன. கனமழை காரணமாக உப்பனாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் நாங்கூர், திருநகரி, நெய்த்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
ஆற்றின் ஒரு பகுதியில் கரை உடைந்ததால், சூறக்காடு பகுதியில் 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள பாதிப்பு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான் இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
மேலும் மாவட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி! வெடிகுண்டு தயாரிக்கும் பார்முலாவை குறிப்பெடுத்து வைத்திருந்த 3 பேர் கைது
டெல்டாவில் மழையின் தீவிரம் குறையும் – #IMDCHENNAI 🙌
சிதம்பரம்,மயிலாடுதுறை,கடலூர்,
திருவாரூர் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் நெற்பயிர்கள் சேதம் … இடம் :சீர்காழி @tnsdma @Vignesh_twitz @ChennaiRains @Priyan_reports @praddy06 @kavithamurali @Saislakshmanan @VelMuruganAbp pic.twitter.com/lbn2zKnxOQ— Neppolian (@i_neppo) November 12, 2022