Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? லவ்டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி பதிவு!

    நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? லவ்டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி பதிவு!

    நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என லவ்டுடே இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    ‘லவ்-டுடே’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படம் இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வசூலிலும் நன்றாக கல்லா கட்டி வருகிறது. இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

    இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளதாவது:

    இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும், அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி.

    நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி.

    நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

    திரைப்பிரபலங்கள் பலரும் ‘லவ்-டுடே’ திரைப்படம் குறித்து பெருமையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க:சென்னையில் அதிர்ச்சி! வெடிகுண்டு தயாரிக்கும் பார்முலாவை குறிப்பெடுத்து வைத்திருந்த 3 பேர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....