Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 முதல் சுங்கக் கட்டண உயர்வு!

    தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 முதல் சுங்கக் கட்டண உயர்வு!

    தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

    இந்நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை கட்டணம் உயரும் என தெரிய வருகிறது. 

    இந்நிலையில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு நள்ளிரவு 12 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னையைப் பொறுத்தவரையில், புறநகர்ப் பகுதியில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. 

    நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்; பாலியல் தொல்லை காரணமாக கலாஷேத்ரா மாணவர்கள் திட்டவட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....