Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படத்தில் இளையராஜா..

    13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படத்தில் இளையராஜா..

    இளையராஜா 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தி படம் ஒன்றிற்கு இசையமைக்கிறார்.

    இந்திய திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் கவனம் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

    இவரின் இசையில் இன்று விடுதலை படம் வெளியாகியிருக்கிறது. கஸ்டடி என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இளையராஜா 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்தி படம் ஒன்றிற்கு இசையமைக்கிறார்.

    ஸ்ரேயா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘மியூசிக் ஸ்கூல்’ என்ற இந்தி படத்திற்குதான் இளையராஜா இசையமைக்கவுள்ளார். இப்படம், குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாவதும், இதன் பின் இசைப்பள்ளியின் சேர்ந்த பிறகு அவர்களது மனநிலை எப்படி மாறுகிறது என்ற கதைக்களத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. 

    இந்தியில் இப்படம் எடுக்கப்பட்டாலும், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு மே 12- ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக, அமிதாப் பச்சன் நடிப்பில் 2009 நவம்பர் 14-ம் தேதி வெளியான ‘பா’ என்ற இந்தி படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்து குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....