நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான சரக்கு மற்றும் சேவை வரியைக் காட்டிலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி 26 சதவீதம் அதிகமாகும்.
மத்திய நிதியமைச்சகம் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூபாய் 1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ. 1,47,686 கோடியில், மத்திய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியும் மாநில ஜிஎஸ்டி ரூ. 31,813 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடியும் (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ.41,215 கோடி உட்பட) வசூலாகியுள்ளது.
மேலும், செஸ் வரி ரூ. 10,137 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 856 கோடி உட்பட) வசூலாகியுள்ளதாக தனது அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி 26 சதவீதம் அதிகமாகும்.
👉 ₹1,47,686 crore gross GST revenue collected in September 2022
👉 Monthly GST revenues more than ₹1.4 lakh crore for seven months in a row
👉 Revenues for the month of Sept. 2022 26% higher than the GST revenues in the same month in 2021
➡️ https://t.co/CVL2CCYJtI
(1/2) pic.twitter.com/xEitIasRmC— Ministry of Finance (@FinMinIndia) October 1, 2022
இதையும் படிங்க: கட்டு கட்டுமாக சிக்கிய கள்ள நோட்டுகள்; போட்டி போட்டு எடுத்த பொதுமக்கள்